துணை வேண்டி....
கடல் கடந்து உறவுகள் பிரிந்து
ஓர் அறையில் ஒற்றையில் காலம் போகையில்...
வந்த புதிதில் வந்த
பறவை,பூனை,பல்லி,எறும்பு,ஈ
இவைகள் யாவும்
இப்போது என்னுடன் இல்லை;
என்னை போல கடன் சுமை
காரணமாகி கடல் கடந்து போனதுவோ?
காதல் கொண்டு பின்பு கைவிட்ட
காதலி நினைவாய் ஏக்கமாய் திரிகிறதோ?
எங்கேனும் பார்த்தால்
என் வீட்டுப்பக்கம்
வர சொல்லுங்கள்
சற்று நேரம் ஆறுதலாக பேச....
December 2, 2009
December 1, 2009
இனிப்பு; காரம்; கொஞ்சம் தேநீர் : கவிதைகள்
இனிப்பு
நீ சிரிக்கையில்
புதிதாய் பூத்த மலராய்
உன் புன்னகை;
நீ பிரிகையில்
மழைக்காக ஏங்கிக்கிடக்கும்
நிலமாய் மனது!!!
காரம்
யாரோ தூக்கி எறிந்த
உபயோகிக்கமுடியாத
தெருவோர மிதிவண்டியை
நினைவுபடுத்துகிறது
நம் காதல் நாட்கள்!!!
கொஞ்சம் தேநீர்
இப்பொழுதெல்லாம் கவிதை எழுத
அதிகம் சிந்திப்பதில்லை
காதலில் தோல்வி !!!
Labels:
கவிதைகள்
Subscribe to:
Posts (Atom)


