December 4, 2009

கவிதை மலரெடுத்து உனக்கு சூட்டுவேனடி ..

அந்தி மாலை நேரம்.மொட்டை மாடி.முழு நிலவாய் என் தலைவி.என் கண்கள் பார்த்து ஏதோதோ கதை அளாவிக்கொண்டு இருந்தவள் சட்டென ஒரு புள்ளி வைத்து என்னிடம் கேட்டாள்,மாமா,எனக்கு இப்போதே பூ ஒன்று வேண்டும் தலையில் சூட.சரி வாங்கி வருகிறேன்,என்கிறேன்.இல்லையில்லை எனக்கு இப்போதே வேண்டும் வேண்டும் என்கிறாள்.நம்மிடம் என்ன பூந்தோட்டமா இருக்கிறது உடனே பறித்துகொடுக்க,சற்று பொறு,கடைக்கு சென்று வாங்கிவருகிறேன் என்கிறேன்.நீங்கள் எனக்கு எல்லா பூவையும் வாங்கி கொடுத்துவிட்டீர்கள்.யாரும் வாங்கித்தாராத பூவொன்று இங்கயே வேண்டும் என பிடிவாதம் பிடிக்க,மனம் அன்பு தலைவிக்காக யோசித்தது.சற்று நேரம் சென்றதும், 'சரிம்மா,நீ கேட்ட அப்படி ஒரு பூ இருக்கிறது' என்றேன்.அப்படியா? என்ன பூ என என் தலைவி கேட்ட,நான் சொல்ல ஆரம்பிக்கிறேன்.

கொஞ்சம் காதல்
கொஞ்சம் காமம்
கொஞ்சம் ஊடல்
கொஞ்சம் தேடல்
இவை கலந்து
நிறைய முத்த நீரூற்றி
மன செடியில் பதிய வைத்து
மேகத்தில் ஒளிய வைத்த
கவிதை மலரெடுத்து
கண்மணி உனக்கு சூட்டுவேன் இதோ !!!

எனக்கு கடைசியில் கவிதைப்பூவையே தலையில் சூட்டுகிறீர்களா? கில்லாடி தான் நீங்கள்,இப்போதே சூட்டுங்கள் என்றவள் அருகில் வந்து கைகளை இறுகப்பற்றுகிறாள்;அந்த இறுக்கத்தில் உலகம் உள்ளவரை உன்னுடன் இருப்பேன் என்கிற அர்த்தம் புரிந்தது.எனக்கோ அந்த உலகமே என் உள்ளங்கையில் அடங்கியது போலிருந்ததது.வானத்து விண்மீன் எங்களை பார்த்து வெட்கத்தில் கண்சிமிட்டி விட்டு மறைந்தது.

December 3, 2009

என் முதல் ஆங்கில கவிதையும், கடவுளிடம் கேட்க இருக்கும் வரங்களும்.

என் முதல் ஆங்கில கவிதை.


HARSH BULL 


Generally my heart is gold
if Challenge
comes i will become lion
always i tell you the truth
always i do lot good

i get success and success
come we dance,sing and celebrate
we seek pleasure all the time
come we dance,sing and celebrate

one bull is staring at me
one more bull is coming back at me
i can win these two bulls
i don't have fear in my heart
i don't bother about anybody
will success come to me ??????




டிஸ்கி 1 : கண்டிப்பாக இது தலைவரின் 'பொதுவாக என் மனசு தங்கம்' பாடலின் ஆங்கில மொழியாக்கம் இல்லை.ஹி ஹி ஹி...

டிஸ்கி 2 : உனக்கு தமிழ்லயே ஒழுங்கா கவிதை எழுத வராது..இதுல இங்கிலீஷ்ல கவிதையா என்று துப்புவது சரியில்லை பாஸ்.வேணும்னா அடுத்தமுறை
ஹிந்தில கவிதை எழுதட்டுமா :)


            **********************
கடவுளிடம் கேட்ட வேண்டிய வரங்கள்:


கடவுள் என் முன்தோன்றினால் என்ன வரம் கேட்பது என்று யோசித்தேன்..கடவுளை நேர்ல நாம பார்ப்பதே ஒரு வரம்.
அவர் நம்மகிட்ட ஒரு பதிவோ,பின்னூட்டமோ போடாம தீடிரென வந்து கேட்டால் நான் மறந்து விட மாட்டேனா...
அதான்  ஒரு லிஸ்ட் போட்டு இருக்கேன்.


1) அமெரிக்க சம்பளம்
2) இங்கிலாந்து வீடு
3) இந்திய மனைவி
4) ஜப்பான் கார்
5) சைனீஸ் உணவு
6) பின்லாந்து மொபைல்
7) சுவிச்சர்லாந்து பணம்
8) ஆப்பிரிக்கா வைரம்
9) சிங்கப்பூர் விமானம்
10) தமிழ்மண விருது & தமிளிஷ் வோட்டு (ஹி ஹி ஹி) 



டிஸ்கி : முதல்ல உருப்படியான பதிவை போடணும்ன்னு வேண்டிக்க எருமை :)