November 25, 2010

ஒருநாள் பூவாய் மலர்வேனோ;

சிலந்தி கூட்டுக்குள்
சிறைபட்ட சிறுவண்டாய்

சிக்கிக்கொண்டும் மனது
சிரிக்கிறதே என் கண்மணி;

கொட்டும்போது கூட
வலிக்கவில்லை,இனிக்குதடி;

வருடக்காதல் உன்னொரு சொல்லில்
வருடுமா மெல்லிய இறகாய்;

வளைந்த பாதை திரும்பாது
வாடிய மலரும் அரும்பாது

எத்தனை பெண்களை பார்த்தாலும்
அத்தனை முகங்கள் நீயாகி

மனதெனும் பெரும் காட்டில்
எரிகிறாய் அணையா தீயாகி!

வர்ணம் போன பட்டாம்பூச்சி
வேகம் இல்லா நீர்வீழ்ச்சி

நான்கூட இவைதானோ-பெண்ணே
உன்நிழல் இன்றி போவேனோ;

உன்பார்வை எனும் பூங்காவில்
ஒருநாள் பூவாய் மலர்வேனோ;