November 7, 2009

மழைசாரலில் மல்லிப்பூ !!!



என்னை மயக்கிய அழகிய பிசாசே
உன்னை மனச்சிறையில் தள்ளவா
இல்லை அடக்கி அல்லவா?

எங்கயோ பிறந்தாய்; என்னுள் நுழைந்தாய்;
எங்கேயோ இருக்கிறாய்;உயிரில் மிதக்கிறாய்;
மழையாக வருகிறாய்; சாரலாக போகிறாய்;
மெதுவாக கிசுகிசுத்து மின்னலாக மறைகிறாய்;
பூவாக மணக்கிறாய்; புயலாக பாய்கிறாய்;

தென்றலாக வந்து தீமூட்டி போகிறாய்;
தேடி தேடி அலைகிறேன்
முகவரிதான் கிடைக்கவில்லை
முகத்தையும் காட்டவில்லை.

மல்லிப்பூ வாசனையில்
மனதையே கிறங்கடித்தாய்;
வாட்டியது போதுமடி
வந்தென்னை சேர்ந்துவிடு !!!

6 comments:

Unknown said...

எளிமையான இனிமையான கவிதை

Prathap Kumar S. said...

ஐ...கவிதை...கவிதை...

நல்லாருக்கு நண்பரே..

அன்புடன் மலிக்கா said...

மழைச்சாரலில் மல்லிகை
மனசிறையில் யாரவள்
மங்கை என்ற மனைவியா இல்லை
மயக்கிய மோகினியா.

எதுவானாலும் கவிதை அருமையோ அருமை..

பா.ராஜாராம் said...

ரொம்ப பிடிச்சு இருக்குங்க.

Unknown said...

அருமை உனக்குள் இத்தனை இனிமையான கவிதையா வாழ்த்துக்கள் !

பூங்குன்றன்.வே said...

@ விஜய்
//எளிமையான இனிமையான கவிதை//
உங்களின் கருத்தும் இனிமையாக உள்ளது.நன்றி.

@ நாஞ்சில் பிரதாப்
//ஐ...கவிதை...கவிதை...
நல்லாருக்கு நண்பரே//

இதை கவிதைன்னு நீங்க ஒப்புக்கொண்டதே ரொம்ப சந்தோஷமா இருக்கு.உங்களின்
தொடர் பின்னூட்டங்கள் எனக்கு உற்சாகமாக இருக்கு தலைவா.

@ அன்புடன் மலிக்கா
//எதுவானாலும் கவிதை அருமையோ அருமை//

எல்லாம் நீங்க தர ஊக்கம் தான் தோழியே. ரொம்ப நன்றிங்க.

@ பா.ராஜாராம்
//ரொம்ப பிடிச்சு இருக்குங்க//

எதுங்க? மல்லிபூவையா அல்லது என் கவிதையையா?
முதல் வருகை உங்களது..என் பதிவுக்கு மெருகூட்டுகிறது.மிக்க மகிழ்ச்சி.

@ MARIA
//அருமை உனக்குள் இத்தனை இனிமையான கவிதையா வாழ்த்துக்கள்//

உங்க கருத்துக்கு ரொம்ப நன்றிண்ணா.அண்ணிய பத்தி நீங்க எவ்ளோ கவிதை பாடி இருக்கீங்க.அதை விடவா?