November 9, 2009

பதிவுலக விழாக்கால சலுகைகள் ! பரிசுகள் !!!!



முந்துங்கள் !!!   பதிவுலக விழாக்கால 
சலுகைகள் !  பரிசுகள் !!!!

1) என் ஒவ்வொரு பதிவுக்கும் பின்னூட்டம் இடும் அனைவருக்கும் வருகிற ஏப்ரல் மாதம் முப்பத்து ஒன்றாம் தேதி,வருடம் 2010 அன்று அழகிய கைகடிகாரம் பரிசு அளிக்கப்படும்.

2) அதே நாள் குலுக்கல் முறையில் தேர்ந்தடுக்கப்படும் 3 அதிர்ஷ்டசாலிகளுக்கு மடிக்கணினி பரிசு தரப்படும்.

3) என் ப்ளாக்கில் அதிக பின்னூட்டங்கள் இடும் முதல் இரண்டு பேர்க
ள் விஷேச பரிசாக துபாய் சரவண பவனில் ஒரு நாள் முழுக்க உணவு இலவசமாக
சாப்பிடலாம்.ஒட்டக பாலில் போட்ட டீயும் இலவசம்.


( விதிமுறைகள் :துபாய் பதிவர்கள் இந்த போட்டியில் பங்கேற்கக்கூடாது.போட்டியில் வெல்லும் அந்த இரண்டு பேர்களும்  இந்தியாவில் இருந்து துபாய்க்கு சொந்த செலவில் வர வேண்டும் )


4) அதிக பின்னூட்டங்கள் இடும்(என் ப்ளாக்கிற்கு மட்டும்) சிங்கப்பூர்,துபாய் பதிவர்களை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து வெற்றி பெரும் ஒரு அதிர்ஷ்டசாலிக்கு புத்தம் புதிய டாட்டா நானோ கார் பரிசளிக்கப்படும். 


(விதிமுறை: முன்பணமாக மூன்று லட்சம் மட்டுமே செலுத்த வேண்டும். முன்பணம் திருப்பிதர மாட்டாது)
 

பதிவர்களே....முந்துங்கள்.அதிக பின்னூட்டங்கள் இடுங்கள்.பரிசுகளை தட்டி செல்லுங்கள் !!!

7 comments:

Unknown said...

சரியான மொக்கை போட்டுவிட்டய கண்ணா !

Unknown said...

ஏன் நண்பா ஏப்ரல் மாசம் முப்பத்து ஒண்ணாம் தேதிய தேர்ந்து எடுத்தீங்க? பெப்ரவரி முப்பத்து ஒண்ணாம் தேதிய தேர்ந்து எடுத்திருந்தா ரம்பா நல்லா இருந்திருக்குமே. உலகத்துல இருக்குற எல்லாரும் வேலை இல்லாம இருக்குறது அந்த ஒரு நாள் தான்.

இருந்தாலும் உங்க கற்பனைக்கும், கற்பனை பரிசுகளுக்கும் வாழ்த்துக்கள்..........

Prathap Kumar S. said...

தலைவா இதுக்கு பின்னூட்டம் போடுங்க சாமி அப்படின்னே சொல்லிருக்கலாம்...
இது என்ன புது டெக்னிக்கு???

//விதிமுறைகள் :துபாய் பதிவர்கள் இந்த போட்டியில் பங்கேற்கக்கூடாது.//


அது என்ன துபாய் பதிவர்கள் கலந்துக்க கூடாது?. எங்க காட்பாதர் அண்ணாச்சிகிட்ட சொல்லிக்குடுத்துருவேன்...

கலையரசன் said...

அது என்ன துபாய் பதிவர்கள் கலந்துக்க கூடாது?. எங்க காட்பாதர் அண்ணாச்சிகிட்ட சொல்லிக்குடுத்துருவேன்...

Reppppppeeeettttuuuu////

பூங்குன்றன்.வே said...

@ MARIA
//சரியான மொக்கை போட்டுவிட்டய கண்ணா//

எப்பவும் நல்ல பதிவா போடுறேன்(சிரிக்காதிங்க), ஸோ இன்னிக்கு மட்டும் இந்த மொக்கை!

@ Vijay
//ஏன் நண்பா ஏப்ரல் மாசம் முப்பத்து ஒண்ணாம் தேதிய தேர்ந்து எடுத்தீங்க? பெப்ரவரி முப்பத்து ஒண்ணாம் தேதிய தேர்ந்து எடுத்திருந்தா ரம்பா நல்லா இருந்திருக்குமே. உலகத்துல இருக்குற எல்லாரும் வேலை இல்லாம இருக்குறது அந்த ஒரு நாள் தான்.

இருந்தாலும் உங்க கற்பனைக்கும், கற்பனை பரிசுகளுக்கும் வாழ்த்துக்கள்.//

நீங்க சொன்னா மாதிரி பிப் அன்று பரிசு தருவது எனக்கும் ஓகே.இருந்தாலும் எல்லாமே சும்மா சும்மா தானே!!

@ நாஞ்சில் பிரதாப்
//அது என்ன துபாய் பதிவர்கள் கலந்துக்க கூடாது?. எங்க காட்பாதர் அண்ணாச்சிகிட்ட சொல்லிக்குடுத்துருவேன்.//

ஏன் பாஸ் இந்த கொலைவெறி உங்களுக்கு? இது சாதாரண போட்டி தானே..இதைவிட பெரிய போட்டி ஒண்ணு நெக்ஸ்ட் வீக்ல சொல்றேன்..அதுல ஒன்லி நம்ம துபாய் பதிவர்கள் மட்டும் தான்.
( ஹி.ஹி..)

@ கலையரசன்
//Reppppppeeeettttuuuu//

நான் அப்பிட்டு....வேணாம் முடியல..

அன்புடன் மலிக்கா said...

இது என்ன கொடுமை,
துபை காரங்களுக்கு பரிசுயில்லையா?

அப்ப நான் எஸ்கேப்

Vidhoosh said...

ஹா ஹா ...இப்படியெல்லாம் கிளம்பிடுவீங்களா...

நடத்துங்கள்..
--வித்யா