November 10, 2009

காதல் போர்க்களம்

காதல் போர்க்களம் ...


இரவு பூக்களாய் உன்
கனவுகள்
சுகந்த மலராக மலர்கிறது;

நிலவின் ஒளியாய் உன்
நினைவுகள்
சூர்ய வெளிச்சமாய் மிளிர்கிறது;

அம்பென பாயும் உன்
பார்வையோ
பூவிதழாய் இனிக்கிறது;

வாழ்வியல் இலக்கணமின்றி நம்
உடல்கள்
காமனின் போர்க்களத்தில் குதிக்கிறது;

எல்லாம் முடிந்து எழுகையில்
ஏனோ இதயம் 
பெருங்குரலெடுத்து அழுகிறது  !!!

11 comments:

அன்புடன் மலிக்கா said...

காதல் கவிதை கண்ணுக்குள் மிளிர்கிறது,,

அருமையாக இருக்கு தோண்டத்தோண்ட மனஆழத்திலிருந்து அற்புதமான வரிகள் எழும்பும்.ம்ம்ம்.

தொடரட்டும் காதல் கணைகள்..
வளரட்டும் கவிதை வரிகள்...

Unknown said...

நண்பா இந்த கவிதைக்கு "பாக்தாத்திலிருந்து பூங்குன்றன் காதல் ஏக்கத்துடன்" தலைப்பு எப்படி இருக்கும்?

நல்ல கவிதை

கலையரசன் said...

:-)

முனைவர்.இரா.குணசீலன் said...

அட!!
நன்றாகவுள்ளது கவிஞரே...
சங்க இலக்கியத்தில் புறநானூற்றுப்பாடல் பாடிய புலவர் ...

கணியன் பூங்குன்றனார்...

(யாதும் ஊரே.
யாவரும் கேளிர்)

பெயர் பார்த்து இவ்வலைப்பதிவுக்கு வந்தேன்...

பூங்குன்றன்.வே said...

@ அன்புடன் மலிக்கா

நீங்க வேற மேடம்.நான் எங்கே தோண்டுவது..அதுவா வருது.அடக்க முடியல.காதல் பீலிங் ஸை சொல்றேன்.என்னமோ நடக்குது.மர்மமா இருக்குது.

பூங்குன்றன்.வே said...

@ விஜய்

அடிவாங்க வைக்க ஒரு கூட்டமே சுத்துது..நீங்கதான் அதுக்கு தலைவனா?

பூங்குன்றன்.வே said...

@ கலையரசன்

நல்லா இருக்குன்னு சிரிக்கிறீங்களா? இல்ல நல்லா இல்லைன்னு சிரிக்கிறீங்களா??

பூங்குன்றன்.வே said...

@ முனைவர்.இரா.குணசீலன்

//கணியன் பூங்குன்றனார்//

அவர் எல்லாம் ரொம்ப பெரிய ஆளுங்க.

//பெயர் பார்த்து இவ்வலைப்பதிவுக்கு வந்தேன்//

பெயர் பார்த்து வந்து ரொம்ப ஏமாந்து போய்ட்டீங்களா திரு.இரா.குணசீலன்.
உங்களின் முதல் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் ரொம்ப நன்றி!!!

முனைவர்.இரா.குணசீலன் said...

ஏமாறவில்லை நண்பரே...

பா.ராஜாராம் said...

இங்குள்ள எல்லா கவிதைகளையும் வாசிச்சுட்டேன் குன்றா.அருமையாய் இருக்கு.தொடர்ந்து எழுதுங்கள்.வாழ்த்துக்கள் மக்கா!

Unknown said...

பூ உன் எண்ணங்கள், ஆசைகள் வெளி வருகின்றது ! நன்று
அருமை !

அருமை !