November 12, 2009

காதல் சிறை

காதல் சிறை !!!

நீ என் கண்களை பார்த்து
பேசுகையில்
காலடியில் உலகம் நழுவுகிறது;

நீ என் கைகளை பற்றி
கதை பேசுகையில்
என் மனத்தோட்ட மலர்கள் எல்லாம் பூக்கிறது;

உன் கொலுசு சப்தம்
கேட்கையில்
இதயம் நூறுமுறை படபடக்கிறது;

இப்படியாய் என் காதல்
தினம் தினம்
வளர்பிறையாய் வளர்கிறது - ஆகவே

தேவதை வந்து வரம் கேட்டால்
வேணாம் என்பேன்.
நீயே எனக்கு தேவதையாக இருப்பதால்...

கண்களால் உன்னை சிறையிலிட்டு
என் மனதிற்குள்
முத்த சங்கிலியால் கட்டி,

வேண்டுமென்றே விடுதலை செய்து
லஞ்சமாய்
மொத்தமாய் உன்னை பெறுவேன் !!!

8 comments:

Unknown said...

காலையில் ஒரு கவிதை
அதுவும் காதல் கவிதை
மனதிற்கு இதமான கவிதை
காதலியை
"வேண்டுமென்றே விடுதலை செய்து
லஞ்சமாய்
மொத்தமாய் உன்னை பெறுவேன் !!! "

நன்றாக இருக்கு நண்பா

அன்புடன் மலிக்கா said...

காதல் சிறையிற்குள் சினேகிதனே
சிறைவைத்தற்கு தண்டனையாய்
லஞ்சமாய் மொத்தமும் கேட்பது அருமை...

தொடரட்டும் சிறைவாசம்...

Unknown said...

காதல் சிறகினிலே நந்தலலவா ! அருமை !அருமை !
காதல் சிறை !!!
உண்மையில் காதல் என்பது சிறை தான்!
ஆனால் அதுவும் ஒரு சுகம் தான் !
வாழ்க்கையில் எத்தனையோ முறை, நிறைய பெண்களை கடந்து வந்து
இருப்போம் ( ஆட்டோகிராப் படம் மாதிரி இல்லை ).

ஆனால் முதல் காதல் மறக்கபடுவதும் இல்லை , அழிக்கபடுவதும் இல்லை !
அது தான் காதல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது !

வாழ்த்துக்கள்

Unknown said...

காதல்...
கண்களால் கைது செய்து
மனதில் சிறை வைத்து
உயிர், மெய் அறியவைத்து
நரகமாய்...
சொர்கத்தை காட்டுமிடம்.

பூங்குன்றன்.வே said...

@ விஜய்

//நன்றாக இருக்கு நண்பா//

மிக்க மகிழ்ச்சி விஜய்.

பூங்குன்றன்.வே said...

@ அன்புடன் மலிக்கா

காதல் சிறையினில் பரோலில் வரமுடியாத கைதியாக உள்ளேன்.அதுவும் ஆயுள் கைதியாக.

பூங்குன்றன்.வே said...

@ மரியா

நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை அண்ணா.காதல் எந்த காலத்திலும் அழிய முடியா ஒன்றுதான்.

பூங்குன்றன்.வே said...

@ RKUMAR

டேய் ராஜ்...இங்க நீயும் வந்தாச்சா? எனக்கு பின்னூட்டம் இட்ட உனக்கு ரொம்ப நன்றி மச்சான்.