November 4, 2009

என் உயிர் தோழியே !!!

இணையத்தில் தோழியாகி
இதயத்தில் புகுந்து விட்டாள்;
நல்ல நட்பினால்
நெஞ்சத்தில் நிறைந்து விட்டாள்;


பாசாங்கு இல்லை,
முகமூடி இல்லை;
வார்த்தை ஜாலங்கள் இல்லை;
வெறுப்புகள் இல்லை;
போலி வேஷமும் இல்லை;


நட்பின் இலக்கணமாய்
நாங்கள் இருக்கிறோம்;
உள்ள தூய்மையோடு
உறவாடுகிறோம்;


வர்ண தோரணை கட்டி உன்னை
வரவேற்கிறேன் என் மன கூட்டுக்குள்..
உண்மையின் நிழலாய் வருகிறேன் என்கிறாய் நீ.
வேண்டாமென சொல்வேனா என் உயிர் தோழியே!!!

5 comments:

Unknown said...

Simply Soooppppeeeeeerrrrrrrrbbbbbbbbb

அன்புடன் மலிக்கா said...

என்னவேன்று சொல்ல வார்த்தைகளில்லை
நட்பிற்கோர் இலக்கணமாய் நல்லதொரு வரிகள்

நீடித்து நிலைக்கட்டும் நெடுங்காலம் வாழட்டும்
தூய்மையான தோழமை நீடூடி வாழட்டும்

பூங்குன்றன்.வே said...

அன்பு மலிக்கா,

ரொம்ப நன்றி.என் தோழி ரொம்ப நல்லவங்க.பல பொறுப்புக்களை சிறப்பா செய்துட்டு வர பொண்ணு.
அவங்க என் தோழியா கிடைச்சது என் பாக்கியம்.ஆனா அவங்க எப்பவும் கொஞ்ச நேரம் தான் என்கிட்ட பேசுவாங்க.ரொம்ப நேரம் பேசனும்ன்னு நீங்க அவங்களை பார்த்தா
கொஞ்ச சொல்லுங்க.

அன்புடன் மலிக்கா said...

ஓகே பார்த்ததும் சொல்லிவிடுகிறேன் தோழரே...

அன்புடன் மலிக்கா said...

ஓட்டுபட்டை போட்டுவிட்டால் மட்டும் போதாது அதை சம்மிட் செய்யனும், பதிவுபோடும்போதே சம்மிட் செய்யுங்க..