November 9, 2009

இறுதி கவிதை!!!


சமர்ப்பணம் 

சிறுக சிறுக சேர்த்து வைத்திருந்த
உன் நினைவுகளை மொத்தமாய்
காகிதமாய் செய்து கப்பல் இட முயல்கிறேன்;

வண்ண வண்ண பூக்கள் போல்
பூத்திருந்த நம் ஞாபகங்கள்
காய்ந்த சிறகுகளாய் உதிர்வதை உணர்கிறேன்;

காதலிக்கும் காலங்களில் நீ பேசிய
வார்த்தைகள் ஒவ்வொன்றும்
தேன் ஆறாய்;
நீ மறந்து சென்ற பின் யாவும் எனக்கு
கானல் நீராய்;

சேகரித்த உன் சிரிப்புகளை
செலவு செய்ய மனமில்லை;
உன்னை காதலித்த பாவத்திற்காக
இறுதி கவிதையை சமர்ப்பிக்கிறேன்;

9 comments:

Muruganandan M.K. said...

"சிறுக சிறுக சேர்த்து
வைத்திருந்த
உன் நினைவுகளை
மொத்தமாய்
காகிதமாய் செய்து
கப்பல் இட முயல்கிறேன்"

நல்ல கற்பனை.

நட்சத்திரப் பதிவாளர் ஆனமைக்கு வாழ்த்துக்கள்

க.பாலாசி said...

//உன்னை காதலித்த பாவத்திற்காக
இறுதி கவிதையை சமர்ப்பிக்கிறேன்;//

அப்ப இனிமே கவிதையே எழுதமாட்டீங்களா?....(ஹி..ஹி...)

கவிதை நன்று நண்பரே....

Unknown said...

அதென்ன இறுதி கவிதை, இது உங்கள் காதலிக்கா அல்லது பதிவிற்க்கா?

பூங்குன்றன்.வே said...

@ Dr.எம்.கே.முருகானந்தன்

//நல்ல கற்பனை.

நட்சத்திரப் பதிவாளர் ஆனமைக்கு வாழ்த்துக்கள்//

நன்றிகள் நண்பரே.உங்களின் முதல் வருகைக்கும்,பின்னூட்டத்திற்கும்..

பூங்குன்றன்.வே said...

@ க.பாலாசி

//அப்ப இனிமே கவிதையே எழுதமாட்டீங்களா?....(ஹி..ஹி...)
கவிதை நன்று நண்பரே....//

உங்களை எல்லாம் அவ்வளவு சீக்கிரம் சந்தோஷமா இருக்க விட போவதில்லை.

அவங்களை நிறுத்த சொல்லுங்க..நான் நிறுத்துறேன்.(ஹி ஹி ஹி)

பூங்குன்றன்.வே said...

@ விஜய்
//அதென்ன இறுதி கவிதை, இது உங்கள் காதலிக்கா அல்லது பதிவிற்க்கா?//

ஆசைய பாரு..இது இறுதி பதிவுன்னா அவ்ளோ சந்தோஷம்(நற..நற..)
இன்னும் நிறைய நிறைய எழுதி, உங்களை எல்லாம்..

அன்புடன் மலிக்கா said...

ஏன் என்னாச்சி,
இப்படியா ஆகிப்போச்சி
உணர்வென்பது உயிர்மூச்சி
அது எப்போது துண்டாச்சி

கவிதை நல்லா எழுதுறீங்க சூப்பர் தொடர்ந்து எழுதுங்க வாழ்த்துக்கள்...

பூங்குன்றன்.வே said...

@ அன்புடன் மலிக்கா

//கவிதை நல்லா எழுதுறீங்க சூப்பர் தொடர்ந்து எழுதுங்க வாழ்த்துக்கள்...//

உங்களை விடவா நான் நல்லா எழுதுறேன் தோழி.இருந்தாலும் உங்கள் பாராட்டுக்கு தலை வணங்கி இன்னும் சிறப்பாக எழுத முயற்சி செய்கிறேன்.

பா.ராஜாராம் said...

ரொம்ப பிடிச்சிருக்கு இந்த கவிதை குன்றா!