September 28, 2009

உயிரே பிரியாதே ***பகுதி - 10***





பிரேம்...ஒரு சின்ன வாக் போயிட்டு வரலாமா?

கண்டிப்பா போலாம்.நான்கூட உங்கிட்ட கொஞ்சம் பேசவேண்டி இருக்கு.

கதவை பூட்டிக்கொண்டு கிளம்பினார்கள்.ஆர்.டி.நகர் போலீஸ் ஸ்டேஷன் பக்கத்தில் ஒரு மைதானத்தில் அமர்ந்தார்கள்.

சற்றுநேர மௌனத்திற்கு பிறகு பிரேம் ஆரம்பித்தான்.

சூர்யா..உனக்கு என்னாச்சு..ஏன் இப்படி ஆபிஸுக்கு லீவ் போட்டுட்டு குடிச்சிட்டு இருக்க?

சாரிடா மச்சான்.மீனாவை பொண்ணு பார்க்க மாப்பிள்ளை வீட்லர்ந்து வந்து இருக்காங்களாம்.கேட்டதும் ரொம்ப கஷ்டமா இருக்கவே தண்ணி அடிச்சேன்.

எனகென்னவோ நீ அவளை மறந்துடுறது நல்லதுன்னு தோணுது.
அப்புறம் இன்னொரு விஷயம்.நைட் ஏழு மணி இருக்கும்.உங்க அம்மா போன் பண்ணி இருந்தாங்க.உனக்கு போன் பண்ணா நீ எடுக்கலையாம்.என்னாச்சுன்னு என்னை பார்க்க சொன்னாங்க.நானும் அப்பவே உன் மொபைலுக்கு ட்ரை பண்ணேன்.பட் நோ ரெஸ்பான்ஸ்.

மை காட்.தண்ணி அடிச்சதுல ஒண்ணுமே தெரியலடா.நல்லா தூங்கிட்டேன்.அம்மா வேற என்ன சொன்னாங்க?ஒரு நிமிஷம்.அம்மாகிட்ட பேசிடுறேன்.

சரி பேசு.அவங்களும் பாவம்.வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க.

அம்மா...நான் சூர்யா பேசுறேன்..எப்படி இருக்கம்மா?

.....

உடம்புக்கு ஒண்ணுமில்லமா.ரெண்டு நாளா ஆபிஸ்ல நிறைய வேலை.அதான் இன்னிக்கு கொஞ்சம் சீக்கிரமா வந்து தூங்கிட்டேன்.

.....

அப்பா நல்லா இருக்காரா?தம்பி காலேஜுக்கு ஒழுங்கா போறானா?

.....

சரிமா நான் பிரேம்கிட்ட கேட்டுக்கிறேன்.. நீ உடம்பை நல்லா பார்த்துக்க.நான் அப்புறமா பேசுறேன்.

.....

சரி..வைச்சுடுமா...ஹ்ம்ம்..

பிரேம்...அம்மா என்னடா சொன்னாங்க?உங்கிட்ட கேட்க சொல்லிட்டாங்க.

உனக்கு பொண்ணு பார்த்து இருக்காங்களாம் சூர்யா.அடுத்த வாரம் உன்னை ஊருக்கு வர சொன்னாங்க....ரூமுக்கு போலாமா?

0 comments: