September 25, 2009

உயிரே பிரியாதே ***பகுதி - 4***




சூர்யா எங்கேடா இருக்க ?

சாரி பிரேம்.நீ நல்லா தூங்கிட்டு இருந்த.அதான் உங்கிட்ட சொல்லல.இன்னிக்கு சண்டே.அதான் பக்கத்தில் இருக்கிற சர்ச்சுக்கு வந்திருக்கேன்.இன்னும் முப்பது நிமிஷத்தில் டிபன் வாங்கிட்டு ரூமுக்கு வரேன்..நீ குளிச்சிட்டு ரெடியா இரு.

எல்லாம் சரி.திடீர்னு என்ன சர்ச்சுக்கு எல்லாம் போக ஆரம்பிச்சிட்ட?

சும்மா தாண்டா.மனசு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு.எந்த இடத்தில மனசு அமைதி கிடைக்குதோ அதான்டா மச்சான் உண்மையான கோவில்.எந்த சாமியா இருந்தா என்ன.எந்த மதமா இருந்தா என்ன?

அதுவும் சரிதான் சூர்யா. நீ பிரேயர் முடிச்சிட்டு ரூமுக்கு வா.பசிக்குது.சீக்கிரம் சாப்பிடலாம்.

சரி.போனை கட் பண்ணிடுறேன்.

ஓகே டா.

சர்ச் பாதர் ப்ரேயரை ஆரம்பித்தார்.
" அன்பு ஒன்றுதான் உலகில் தலைசிறந்தது.
உன்மீது நீ அன்பு காட்டுவது போல்
அடுத்தவர் மீதும் அன்பு காட்ட வேண்டும்.
உன் சிநேகிதனுக்காக/சிநேகிதிக்காக உயிரை கொடுப்பதைவிட
உயர்வான அன்பு உலகில் இல்லை.

நான் உன்னைவிட்டு விலகுவதும் இல்லை
நான் உன்னை கைவிடுவதும் இல்லை "

இந்த வார்த்தைகள் அவனுக்குள் மன தைரியத்தையும், புத்துணர்ச்சியையும் அளித்தது.பிரேயர் முடிந்ததும் சூர்யா மனசு லேசானது போல் இருந்தது.
வெளியே வந்து டிபன் ஆர்டர் செய்தான்.பக்கத்தில் இருந்த கடையில் தம் வாங்கி பற்றவைத்தான்.

0 comments: