September 29, 2009

உயிரே பிரியாதே ***பகுதி - 11***






இல்ல பிரேம்..உனக்கு டயார்டா இருந்தா நீ போய் தூங்கு.
நான் கொஞ்ச நேரம் கழிச்சி வரேன்.

பரவாயில்லடா.நானும் கொஞ்சநேரம் இருக்கேன்..

தேங்க்ஸ்டா.நீ என்கூட இருந்தா ரொம்ப சப்போர்டிவா இருக்கு.

ஹ்ம்ம்..நீ மீனா விஷயத்தில் என்ன முடிவு பண்ணிருக்க?இப்ப உங்க வீட்லயும் பொண்ணு பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க.

தெரியல பிரேம்.மீனாகிட்ட என் காதலை சொல்லிட்டேன்.ஆனா அவ மனசுல என்ன இருக்குன்னு தெரியல.

மீனா இல்லைன்னு மறுத்துட்டா?

இல்லடா.எனக்கு நம்பிக்கை இருக்கு.மீனா அப்படி சொல்லமாட்டா.

சப்போஸ் இல்லைன்னு சொல்லிட்டான்னு வைச்சுக்க.

அப்படி என் மீனா மனசுக்குள்ள நான் இல்லைன்னா நீ என்ன சொன்னாலும் செய்றேன் பிரேம்.

சரி..ஒருவேளை மீனா ஓகே சொல்லிட்டு உங்க வீட்டுல முடியாதுன்னு சொல்லிட்டா?

என்ன பிரேம்..லாயர் மாதிரி கேள்வி கேட்டு என்னை கொல்ற?முதல்ல மீனா மனசுல நான் இருக்கேனான்னு தெரியனும்.

சரி..அதுக்கு என்ன பண்ணி போற?

நான் அவகிட்ட சொல்லவேண்டியத சொல்லிட்டேன்.திரும்ப திரும்ப அவகிட்ட போய் என்னால கேட்க முடியாது.

யு ஆர் ரைட் சூர்யா.நீ மறுபடியும் போய் மீனாகிட்ட பேசுன்னு நான் சொல்லல.ஆனா அடுத்த வாரம் வரைக்கும்தான் உனக்கு டைம்.அதாவது உங்க அம்மா பார்த்த பொண்ணை பார்க்க நீ ஊருக்கு போகும்வரை..

சரிடா.அடுத்தவாரம் வரை பார்ப்போம்.

பைன்.இப்பவாச்சும் நாம ரூமுக்கு போகலாமா?

வேண்டாம்..இங்கயே தூங்கலாம்.

அது சரி.காதல் பண்றவனுக்கு கிறுக்கு பிடிக்கும்னு கேள்வி பட்டிருக்கேன்,ஆனா இப்பதான் நேர்ல பார்க்கிறேன்..வாடா கிறுக்கா..வீட்டுக்கு போவோம்..பனி அதிகமா விழுது.

சரிங்க மிஸ்டர் பொறுப்பு பிரேம்.போலாம் வாங்க.

0 comments: