September 25, 2009

உயிரே பிரியாதே ***பகுதி - 3***






பிரேம்...ரொம்ப தாங்க்ஸ்டா.சூப்பர் சரக்கு.நல்ல மப்புடா. இப்ப எனக்கு பயமே இல்ல மாமு.

சரி சரி மச்சி.ரொம்ப உளற ஆரம்பிச்சிட்ட.சாப்பிட என்ன சொல்லட்டும்?

தோசையா இல்ல இட்லியா?

எனக்கு ஒரு பிளேட் மீனா வேணும் மாப்ள.

அய்யோ ஆண்டவா.அவனை விட அதிகம் அடிச்சது நான்.ஆனா உளறது அவனா? டப்பு என்னோடது..மப்பு அவனோடதா...என்ன கொடுமை சார் இது?

பிரேம் மச்சி..ஐ லவ் யு டா. ஐ மிஸ் யூ டா.

அடப்பாவி..போதைய போட்டு ரொம்ப இம்சை பண்றானே.ஐ லவ் யூ சொல்ற நேரமாடா இது.வீட்டுக்கு போலாம் வா.நேரம் ஆச்சு சூர்யா .

மீனா வீட்டுக்கு இப்ப வேணாம் பிரேம்..ரொம்ப லேட் ஆயிடுச்சி.

நீ என்கிட்ட அடிவாங்கபோர சூர்யா .நம்ம வீட்டுக்கு போலாம்னு சொன்னேன்.

ஐ ஆம் சாரி மச்சி..எப்படிடா தண்ணி அடிச்சா கூட தெளிவா பேசுற நீ? சரி நம்ம வீட்டுக்கு போலாம் வா.

இரவு முழுவதும் சூர்யா மீனாவை பற்றியே உளறி உளறி தூங்கி போனான்.பிரேம் தம் அடித்துகொண்டே எதையோ நினைத்து கொண்டு இருந்தான்.நீண்ட நேரம் கழித்துதான் தூக்கம் வந்தது.

காலையில் கண்விழித்த போது சூர்யா பக்கத்தில் இல்லை.கூப்பிட்டு பார்த்தும் பதில் இல்லாததால் எழுந்து போய் தேடி பார்த்தான். கைபேசியில் சூர்யா பெயரை அழுத்தினான்.

0 comments: