September 24, 2009

உயிரே பிரியாதே ***பகுதி - 2***







என்ன சூர்யா, போலாமா என்றான் பிரேம்.

போலாம்டா. உனக்கு வேற எங்காச்சும் போகனுமா இல்ல ரூமுக்கு தானா?

எந்த வேலையும் இல்ல மச்சி..நேரா ரூமுக்கு தான் போறோம்.டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு பாருக்கு போலாம்.

இல்ல நான் வரலடா. நீ வேணும்னா சரக்கு அடிக்க போயிட்டு வா.

டேய் காந்தி பேரா. என்னடா ஆச்சு உனக்கு? சாப்பாடு வேணாம்னு சொல்லு, ஆனா சரக்கை மட்டும் வேணாம்னு சொல்லாதடா.

மச்சான், என்னை டிஸ்டர்ப் பண்ணாத ப்ளீஸ். எனக்கு மூடு இல்ல.

எனக்கு தெரியாது..நீ என்கூட வர.சரக்கு அடிக்க கம்பெனி தர, காசும் தர.

நிலைமை தெரியாம பேசாத பிரேம்.ஐ ஆம் டோட்டலி அப்செட்.உங்கிட்ட பேசனும்தான் உன் ஆபிசுக்கு வந்தேன்.

சாரி மச்சான்.என்ன மேட்டர்னு சொல்லு.

இங்க வேணாம்.வண்டிய எடு.கப்பன் பார்க் போலாம்.

கப்பன் பார்க்கில் வண்டியை பார்க் பண்ணிட்டு இருவரும் நடந்து ஒரு பெஞ்சில் அமர்ந்தார்கள். மீனாவிடம் காதலை சொன்ன விஷயத்தை சொன்னான் சூர்யா.

மை காட். என்னடா இப்படி பண்ணிட்ட. இப்ப என்ன பண்ண போற?

தெரியல மச்சி.கொஞ்சம் சந்தோசமா இருக்கு.கூடவே பயமாவும் இருக்கு.

ஆல்ரைட்.இப்ப யோசிச்சா குழப்பமா இருக்கும்.சோ ...

சோ...என்ன பண்ணலாம்னு சொல்ற நீ?

நைட் முடிஞ்சா சூரியன் வரும். சரக்கு அடிச்சா ஐடியா வரும்.

0 comments: