September 28, 2009

உயிரே பிரியாதே ***பகுதி - 9***






பஸ்ஸை விட்டு இறங்கி நேராக ஒய்ன் ஷாப்பில் ஒரு அரை பாட்டில் விஸ்கி வாங்கிக்கொண்டு ரூமுக்குள் சென்றான்.
இனிமேல் மீனாவை பற்றி நினைக்ககூடாது,அவள் வீட்டில் மாப்பிளை பார்க்கஆரம்பித்த பிறகு அவளை காதல் மனதோடு பார்ப்பது தவறு என்று சொல்லிகொண்டேமுழு விஸ்கியையும் குடித்து தீர்த்தான்.
தம் ஒன்றை பற்றவைத்து பாதி அடிக்கையிலேயே போதை தலைக்கேற படுக்கையில்விழுந்தான்.ஆனால் அவன் நாக்கு மட்டும் ஏதோதோ புலம்பிக்கொண்டிருந்தது.
டேய் சூர்யா..எழுந்திருடா.என்ன ஆச்சு?ஆபிஸை விட்டு எப்ப வந்த?ஏன் இப்படிஇருக்க?
நண்பா பிரேமு...வந்திட்டியா..வா வா..சரக்கு அடிக்கலாம்.மதியம் ஏண்டா நீ எனக்குகம்பெனி தரல?
மச்சி..சொன்னா கேளுடா..எழுந்திரு என்றபடியே பக்கத்தில் காலி பாட்டிலைபார்த்தான்.
சூர்யா...அரை பாட்டிலை நீயேவா காலி பண்ண?
……….
சரி சூர்யா..கமான்..கெட் அப்.மதியம் சாப்பிட்டியா?
இல்ல மாப்ள..ஆனா இப்ப ரொம்ப பசிக்குதுடா.
அடப்பாவி..இப்ப மணி என்ன தெரியுமா?நைட் 10 ஆச்சுடா.நீ இங்கயே இரு.நான்போய்ட்டு எதாச்சும் சாப்பிட வாங்கிவரேன். நான் போய்ட்டு வரதுக்குள்ள முகம்கழுவிவிட்டு ரெடியா இரு.என்ன?
ஓகே ஓகே..

0 comments: