September 28, 2009


அன்பு தோழி
******************
இந்நேரம் மின்விறியின் துணையால்
நீ தூங்கி கொண்டு இருப்பாய்.
நானோ விண்மீன்களை எண்ணிக்கொண்டு முழித்துகொண்டு இருப்பேன்.




உன் மனம் முழுக்க கனவுகளோடு
என் மனமோ உன் நினைவுகளோடு...

ராசாத்தி நீ தூங்கு,நட்சத்திரத்தின் ஒளியோடு.
செல்லமே நீ தூங்கு,மெல்லமாய் மடிமீது.

ஒரு இரவு உனக்கு..ஒரு ஜென்மம் எனக்கு.
ஒரு பகல் உனக்கு.ஒரு நொடிதான் எனக்கு.

நீ அலுவலகம் வரும்வரை என் மனவுலகம் என்னாவது.
நீ தொலைபேசி மூலம் அழைக்கும் வர
என் உயிர்ஓசை அடங்காது.

காலையில் பேசலாம் நேரம் கிடைத்தால்--நம்
காலம் வரை பேசலாம் வாய்ப்பு கிடைத்தால் !!!!

2 comments:

சந்தோஷ் தமிழன் said...

அன்புள்ள பூங்குன்றன்,

எந்த கவிதையை வர்ணிப்பது என்றே தெரிவது இல்லை . அத்ஹனையும் அருமை. என்னை மிகவும் கவர்ந்தது காதல் மனைவி தான். உங்கள் கவிதைகளுக்காகவே பல காதலிகள் கிடைப்பார்கள். நானும் கவிதைகள் எழுதுவேன். அனல் காதல் கவிதைகள் என்றாலே எனக்கு அவ்வளவாக வராது. உங்கள் கவிதைகளை பார்த்து கற்று கொள்கிறேன்

பூங்குன்றன்.வே said...

@ சந்தோஷ் தமிழன்

//எந்த கவிதையை வர்ணிப்பது என்றே தெரிவது இல்லை . அத்ஹனையும் அருமை.//

மிக்க நன்றி !!!

//உங்கள் கவிதைகளுக்காகவே பல காதலிகள் கிடைப்பார்கள்.//

இது கொஞ்சம் ஓவர் தான் சந்தோஷ். நான் காதலிக்க என் மனைவி இருக்கிறாள்.தவிர நான் வேண்டுவது நல்ல தமிழில் எழுதவும்,நட்புக்களும் மட்டுமே !!

//அனல் காதல் கவிதைகள் என்றாலே எனக்கு அவ்வளவாக வராது. உங்கள் கவிதைகளை பார்த்து கற்று கொள்கிறேன்//

முயற்சி செய்து பாருங்கள்.நிறைய தமிழ் புத்தங்களை படியுங்கள் நண்பா.என்னைவிட மிக நன்றாக கவிதை,கட்டுரை எழுதும் நிறைய நண்பர்கள்,பதிவர்கள் இங்கே இருக்கிறார்கள்.நல்ல தமிழை தேடி படிப்பதில் எந்த தவறும் இல்லை. வாழ்த்துக்கள் சந்தோஷ் !!!