October 8, 2009

உயிரே பிரியாதே ***பகுதி - 14***












மீனாவிடம் பேசிவிட்டு வெளியில் வந்த பிறகுதான் சூர்யாவிற்கு உயிர் வந்ததுபோல் இருந்தது.

நேராக மூர்த்தியிடம் போனான்.

சார், உங்க பொண்ணுக்கு என்னாச்சு?

அதுவா?கொஞ்ச நாளாவே வயிறு வலிக்குதுனு சொல்லிட்டிருந்தா.ரெண்டு நாளைக்கு முன்னதான் டாக்டர்கிட்ட கூட்டிட்டு போனோம்பா.வயித்தில் நீர்கட்டி இருக்காம்.உடனடியா ஆபரேஷன் பண்ணியே ஆகணும்னு சொல்லிட்டார்.இன்னிக்கு ஈவினிங் 7 மணிக்கு டைம் கொடுத்துஇருக்கார்.

ஐ ஆம் சாரி சார்.கவலைபடாதீங்க..உங்க பொண்ணுக்கு ஒரு பிரச்னையும் இல்லாம ஆபரேஷன் முடியும்.உங்களுக்கு எந்த உதவி வேணும்னாலும் என்னை கூப்பிடுங்க.

ரொம்ப தேங்க்ஸ்பா சூர்யா.

ஓகே சார்.ஒண்ணு கேட்பேன்.பட் நீங்க தப்பா எடுத்துக்கக்கூடாது.

என்ன சூர்யா? திடீர்னு பீடிகை போடுற..

இல்ல சார்.உங்களுக்கு எதாச்சும் பணஉதவி தேவைபட்டா தயங்காம என்கிட்ட சொல்லுங்க.

ரொம்ப தேங்க்ஸ்பா சூர்யா..இந்த ஆபரேஷன்க்கு தேவையான பணத்தை ரெடி பண்ணிட்டேன்.மேற்கொண்டு எதாச்சும் வேணும்னா கண்டிப்பா உங்கிட்ட கேட்கிறேன் போதுமா?

ஓகே சார்.

சூர்யா..இன்னிக்கு ஈவ்னிங் நீ மீனாகூட போறல்ல?

ஆமா சார், போய்த்தானே ஆகணும்.

என்னப்பா ஒரு மாதிரி சொல்ற.போக விருப்பம் இல்லையா? இல்ல உனக்கு வேற வேலை இருக்கா?

ச்சே..ச்சே..அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை சார்.நான் என் சீட்டுக்கு போறேன்.அப்புறம் பார்க்கலாம் சார்.

0 comments: