October 8, 2009

உயிரே பிரியாதே ***பகுதி - 17***








பலமுறை அவளுடன் காரில் சென்று இருந்தாலும் இம்முறை ராஜா,ராணி தேரில் ஊர்வலம் போவதை போன்ற ஒரு உணர்வு தோன்றுவதை சூர்யாவால் தடுக்கமுடியவில்லை.

சூர்யா..இன்னிக்கு மீடிங்க்ல நாம அந்த ^^^^பேங்க் மேனேஜர் பத்தி சொல்லலாமா?

இல்ல மேடம்.நாம போறது வேற ஒரு நோக்கத்துக்காக.முக்கியமான விஷயங்களை டிஸ்கஸ் பண்ணும்போது இந்த மாதிரி குறைகளை சொன்னா நம்மை பத்தி அவங்க தப்ப நினைக்க சான்ஸ் உண்டு,சோ சொல்ல வேணாமே.

எஸ்..யூ ஆர் ரைட் சூர்யா.

இரவு 7 மணிக்கு ஆரம்பித்த மீட்டிங் 10 மணிக்குத்தான் முடிந்தது.அங்கேயே எல்லோரும் டின்னெர் முடித்தார்கள்.

தேங்க்ஸ் சூர்யா..மீட்டிங் வாஸ் வெரி குட் நோ.

எஸ் மேம்.யூ ஆர் ரைட். சரி மேம்.நான் கிளம்புறேன். நாளைக்கு பார்க்கலாம்.

வீட்டுக்கு எப்படி போவீங்க?

பக்கத்துலதான் பஸ் ஸ்டாப்.

நோ சூர்யா.நீங்க பஸ்ல வீட்டுக்கு போய் சேர்வதற்குள் ரொம்ப நேரம் ஆகிடும்.வாங்க.நான் ட்ராப் பண்றேன்.

இட்ஸ் ஓகே மேம்.ஐ வில் மேனேஜ்.

நோ நோ..நீங்க கார்ல ஏறுங்க முதல்ல.

ஓகே.

0 comments: