October 8, 2009

உயிரே பிரியாதே ***பகுதி - 15***







தன் இருக்கைக்கு திரும்பிய சூர்யா சுறுசுறுப்பாய் வேலையை ஆரம்பித்தான்.

(ஈவினிங் மீனாகூட தனியாக போகப்போகிறோம் என்பதாலா என்று தெரியவில்லை.கண்டிப்பாக நம்ம ஹீரோக்கு அந்த சந்தோசம்தான், அதான் ஓவரா வேலை பார்க்கிறார் போல.)

எப்படா சாயங்காலம் ஆகும்னு காத்துகொண்டிருந்தான் நம்ம சூர்யா.
மதியம் சாப்பிடகூட போகலன்னா பார்த்துக்கங்க.சரி...ஈவினிங் வரை வெயிட் பண்ணி என்னாகுதுன்னு பாப்போம்.

நாலு மணி ஆகும்போது,பசிப்பதுபோல் தோன்றவே அலுவலகத்திலிருந்து வெளியில் வந்தான்.சாண்ட்விட்ச் சாப்பிட்டு,டீ குடித்தபின் தம்மை பற்றவைத்து ப்ரேம்க்கு போன் செய்தான்.

என்ன மச்சான்..என்ன பண்ற?

சொல்லு சூர்யா..சும்மாதான்.ஒரு இம்பார்டன்ட் காலுக்காக வெயிட் பண்றேன்டா.

யாரு..அந்த புவனாவா?

இல்லடா.பிசினஸ் விஷயமா.

ஓகே மச்சான்..நம்பிட்டேன்.நான் இன்னிக்கு வெளிய சாப்பிட்டு கொஞ்சம் லேட்டா வருவேன்.எனக்காக நைட் சாப்பிடாம வெயிட் பண்ணாத.அதை சொல்லத்தான் கூப்டேன் பிரேம்.

சரிடா மச்சான்.

டேய்..என்ன விசயம்னு கேட்க மாட்டியாடா?

நான் இப்ப கேட்கிற நிலைமையில இல்லடா சூர்யா.வேற ஒரு டென்ஷன்டா.

சாரி மச்சான்..டிஸ்டர்ப் பண்ணிட்டேன்.நைட் பேசிக்கலாம்.

0 comments: