October 8, 2009

உயிரே பிரியாதே ***பகுதி - 16***












அலுவலகத்தில் இருந்து ஒவ்வொருவராவ் வீட்டிற்கு  கிளம்பி கொண்டிருந்தார்கள்.மூர்த்தி ஏற்கனவே பெர்மிஷன் போட்டு நேராக மருத்துவமனைக்கு சென்றுவிட்டார்.

இப்போது மணி சரியாய் 5.50 காட்டியது.

மீனா தன் அறையை பூட்டுவதை சூர்யா கவனிக்க தவறவில்லை.அவள் தன்னை பார்க்கும் முன் அவன் ரொம்ப சீரியசாக இருப்பதுபோல் காட்டிக்கொண்டு, என்றோ முடிந்துபோன ஒரு ஆடிட்டிங் புக்கை திறந்து வைத்து அதில் ஆழ்ந்தான்.

சூர்யா..மீட்டிங் போகலாமா?

......

சூர்யா..ஆர் யூ ரெடி?

சாரி மேம்.கவனிக்கல..கொஞ்சம் பிஸி :)

இட்ஸ் ஓகே..வாங்க போலாம்.

இருவரும் கார் பார்கிங் நோக்கி நடந்தார்கள்.

சூர்யாவின் மனது சந்தோஷத்தில் துள்ளி குதித்துக்கொண்டு இருந்தது.

0 comments: