October 9, 2009

உயிரே பிரியாதே ***பகுதி - 20***



என்ன காரணம்னு நான் தெரிஞ்சிக்கலாமா மீனா?

சொல்றேன்.என்னை பத்தி உங்களுக்கு என்ன தெரியும் சூர்யா?

எனக்கு போதுமான அளவுக்கு தெரியும்.அது போதும்ங்க.

எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சி சூர்யா.

நோ..நீங்க பொய் சொல்றீங்க மீனா.நான் இதை நம்ப மாட்டேன்.

ஒரு பொண்ணு சீக்கிரம் பொய் சொல்ல மாட்டா.அதுவும் கல்யாண விஷயத்துல கண்டிப்பா பொய் சொல்ல மாட்டா.நான் காலேஜ் படிக்கும்போது என்கூட படிக்கிற பையன் என்னை லவ் பண்றதா சொன்னான்.முதல்ல எனக்கு அவனை பிடிக்கல. அப்புறம் அவனோட சின்ன சின்ன சேட்டைகள்,பரிசு பொருட்கள், முரட்டுத்தனம் இதெல்லாம் என்னை தானா அவன் பக்கம் இழுத்துடுச்சி. பீச்,பார்குன்னு நாங்களும் மத்த லவ்வர்ஸ் மாதிரி சுத்திட்டுஇருந்தோம்.

ஒரு நாள் நாங்க பீச்ல சுத்திட்டுஇருந்தப்போ ரெண்டுபேரும் வசமா அவனோட அப்பா கண்ணுல மாட்டிகிட்டோம்.அவங்க அப்பா இவன் பேச்சை கேட்காம வேற ஒரு பொண்ணை கல்யாணத்துக்கு பிக்ஸ் பண்ணிட்டார்.

நாங்க தீவிரமா இது பத்தி டிஸ்கஸ் பண்ணோம்.ரிஜிஸ்டர் ஆபீஸ்ல மேரேஜ் பண்ணிகிட்டோம். அவனோட வீட்ல எங்களை ஏத்துக்கல.எங்க வீட்லயும் முதல்ல ஏத்துக்கல.கொஞ்ச நாள் பொறுத்து நான் வீட்டுக்கு ஒரே பெண் என்பதால் எங்க வீட்ல ஏத்துகிட்டாங்க.

தனிகுடித்தனம் போனோம்.சந்தோசமா இருந்தோம்.அவனும் வேலைக்கு போனான்.ஒரு நாள் ஆபீஸ்ல இருந்து அவன் வீட்டுக்கு திரும்பும்போது எதிர்ல வந்த லாரில மாட்டி ஸ்பாட்லயே.................

மீனாவால் கட்டுப்படுத்த முடியாமல் வெடித்து அழ ஆரம்பித்தாள்.சூர்யா மூச்சடைத்து நின்றான்.அவளுக்குள் இருக்கும் இந்த வேதனை போகும்வரை அழட்டும் என்று சூர்யா மவுனமாக இருந்தான்.

0 comments: