October 8, 2009

உயிரே பிரியாதே ***பகுதி - 18***




சிறிது தூரம் காரின் சப்தம் தவிர மவுனமே நிலவியது.இரண்டு கிலோமீட்டர் சென்றிருக்கும்.கார் குலுங்கி நின்றது.

என்னாச்சு மேம்.

தெரியல சூர்யா.இருங்க செக் பண்றேன்.

நேரம் கடந்தது.கார் நகரவில்லை.மீனா டென்ஷன் ஆவதை சூர்யா கவனித்தான்.

மேம்.நான் என் பிரண்ட் ப்ரேம்க்கு போன் பண்ணி மெக்கானிக்கை வர சொல்லிட்டேன்.நீங்க காருக்குள் உட்காருங்க.டென்ஷன் ஆக வேண்டாம்.

தேங்க்ஸ் சூர்யா.திடீர்னு என்னாச்சுனு தெரியலயே?

ப்ளீஸ் கூல் மேம்.இன்னும் கொஞ்ச நேரத்தில் மெக்கானிக் வந்துடுவான்.

இருவரும் காரில் அமர்ந்தார்கள்.

இப்போது கேட்கலாமா வேண்டாமா என்று சூர்யா யோசித்து கொண்டிருக்கையில் மீனா தன்னையே பார்த்து கொண்டிருப்பது வேறு பயமாக இருந்தது.

என்ன சூர்யா.என்னை விட நீங்க ரொம்ப டென்சனா இருக்கீங்க போல?

இல்ல மேம்.நத்திங்.

0 comments: